search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பணி"

    • போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.

    அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை-பகவதிபுரம், இடமன்-புனலூர் இடையேயான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த மின்மாயமக்கபட்ட ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை மின்சார அதிவேக ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரெயில், மதியம் புனலூருக்கு சென்றது. அடுத்தபடியாக புனலூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் அதிவேக என்ஜின் ரயில், 4.35 மணிக்கு எடமன் செல்லும். இதனைத் தொடர்ந்து பகவதிபுரத்தில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் அதிவேக ரயில், இரவு 8.30 மணிக்கு விருதுநகர் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை பிரிவில் ஒட்டுமொத்தமாக 140.89 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 129.99 கி.மீ. தொலைவிற்கு மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்காக மின்சார நுகர்வு விருதுநகர், வஞ்சி மணியாச்சி துணை மின் நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. இது தவிர சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அடுத்தபடியாக திருத்தங்கல்-பாம்பு கோவில் சந்தை பிரிவில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளில் துணை செக்சன் போஸ்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

    விருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போ, ராஜபாளையத்தில் புதிதாக அமைய உள்ள டிப்போ ஆகியவை மேற்கண்ட பிரிவின் மின்சார பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும். விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், புதிதாக ராஜ பாளையத்தில் டவர் வேகன் சைடிங் வருகிறது.

    செங்கோட்டை-பகவதிபுரம் மற்றும் எடமன்-புனலூர் பிரிவில் ஒட்டு மொத்தமாக 16.71 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 14.70 கி.மீ. ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் 2 பிளாக் ஸ்டேசன்கள் உள்ளன. இதற்காக தென்மலையில் செக்ஷனிங் போஸ்டர்கள் உள்ளன.

    அடுத்தபடியாக புதிய ஆரியங்காவு, எடமன், பகவதிபுரம் ஆகிய இடங்களில் துணை செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான மின்சார பராமரிப்பு தேவையை விருதுநகர், ராஜபாளையத்தின் ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போக்கள் பூர்த்தி செய்யும். விருதுநகரில் ஏற்கனவே டவர் வேகன் சைடிங் உள்ளது. இதுதவிர ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங்கும் அமைய உள்ளது. எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புனலூர்-கொல்லம் இடையே ஏற்கனவே மின் மயமாக்கல் முடிக்கப்பட்டு, அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.

    ×